
புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடும் நோக்கில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளனர்.
பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவம்பர் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதன் காரணமாக, அம்மாநிலத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், அங்கீகரிக்கப்பட்ட 6 தேசிய கட்சிகள் மற்றும் 6 பிஹார் மாநில கட்சிகளுடன் கடந்த 4ம் தேதி ஆலோசனை நடத்தியது. பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் விவேக் ஜோஷி, சுக்பீர் சிங் சாந்து மற்றும் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.