
புதுடெல்லி: கடந்த ஜூலை 23, 24 தேதிகளில் பிரதமர் மோடி இங்கிலாந்து சென்றிருந்தார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது இப்போது 56 பில்லியன் டாலராக உள்ள இருதரப்பு வர்த்தகத்தை 2030-க்குள் இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்டது. இந்தியா வருமாறு இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டாரமருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட கீர் ஸ்டார்மர், 2 நாள் அரசு முறை பயணமாக வரும் 8-ம் தேதி இந்தியா வருகிறார். கடந்த ஆண்டு பிரதமராக பதவியேற்ற பிறகு அவர் இந்தியா வருவது இதுவே முதல் முறை.