
சென்னை: ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு கண்டறியப்பட்டால் நிதி நிறுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஏ.என். எஸ்.பிரசாத் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் நல திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்ற நிதியை பெற்றுக் கொண்டு, திட்டங்களை முழுமையாக செயல்படுத்தாமல் நிர்வாக சீர்கேடுகளுக்கு இலக்கணமாக திமுக அரசு விளங்குகிறது. மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் ஏறத்தாழ 1 கோடியே 12 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.