
சென்னை: சாதிய ஆதிக்கத்துக்கு எதிராக பல்வேறு சட்டங்கள், அரசாணைகள் இயற்றப்பட்டாலும் கூட, அனைத்து சாதியினரும் இன்னும் அர்ச்சகராக முடியவில்லை என்று சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் தெரிவித்தார். வழக்கறிஞரும், சமூகப் போராளியுமான பி.வி.பக்தவச்சலத்தின் 18-வது ஆண்டு நினைவு கருத்தரங்கம் பிவிபி அறக்கட்டளை சார்பில் சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.
‘ஆணவக் கொலைகளும், சாதியை அழித்தொழித்தலும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் பேசியதாவது: