
தேர்தல் வருகிறது என்றாலே கட்சிக்காரங்களுக்கு கண்டபடி செலவு தான். கல்யாணம் காச்சின்னா கட்டாயம் மொய் வைக்கணும்… யாரு வீட்டுல துக்கம்னாலும் மறக்காம மாலையோட போயி நிக்கணும். அடுத்த ஆறேழு மாசத்துக்கு இதுக்காகவே ஒரு தொகைய ஒதுக்க வேண்டி இருக்கும். அதுவும் மாண்புமிகு மக்கள் பிரதிநிதிகள் பாடு சொல்ல வேண்டியதே இல்லை.
அப்படித்தான், பதவிக்கு வந்த நாளாவே ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ-வான மகாராஜன், வெளியில புறப்பட்டாலே ஐம்பதாயிரத்தை எடுத்து கவர்ல போட்டு அதை பத்திரமா பனியனுக்குள்ள பதுக்கி வெச்சுக்கிட்டுத்தான் கெளம்புவாராம்.