
திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் கட்டிடங்கள் கட்டக் கூடாது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பாக கோயில் நிதியில் வணிக வளாகம் கட்டுவதை எதிர்த்து ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவரான மயிலாப்பூர் டி.ஆர்.ரமேஷ் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகள் தொடர்பாக விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், எஸ்.சவுந்தர்குமார் ஆகியோர், கோயிலுக்குள் எந்த கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என இடைக்காலத் தடை விதித்து, விசாரணையை அக். 16-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.