
வேலூர்: கரூர் விவகாரத்தில் தேவை ஏற்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கரூர் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் நீதிபதி பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.