
மதுரை: 18 எம்எல்ஏக்களை அரசியல் அநாதையாக்கியவர் டிடிவி தினகரன் என, சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்பி உதயகுமார் குற்றம் சாட்டினார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம் சமயநல்லூரில் நடந்தது. இதில் பங்கேற்ற சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்பி.உதயகுமார் பேசியதாவது; தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் திமுகவின் துரோகங்களை சக்கர வடிவில் அச்சடிக்கப்பட்டு திண்ணைப் பிரச்சாரம் மூலம் வாக்காளர்களுக்கு வழங்கப்படுகிறது.