
டார்ஜிலிங்: மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் 12 மணி நேரம் பெய்த தொடர் கனமழையால் 7 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 17 பேர் உயிரிழந்தனர். பலர் மாயமாகி உள்ள நிலையில் மீட்புப் பணிகள் அங்கு முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நாளை டார்ஜிலிங் செல்ல உள்ளார்.
டார்ஜிலிங்கில் சனிக்கிழமை அன்று கனமழை பொழிந்த நிலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மக்களின் வீடுகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. மழையினால் சில பகுதிகளுக்கான சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம் மற்றும் சிக்கிமை இணைக்கும் முக்கிய சாலை இதில் சேதமடைந்துள்ளது.