• October 5, 2025
  • NewsEditor
  • 0

ஆலங்குடி வெங்கடாசலம் என்று சொன்னால் அதிமுக-வின் சீனியர் தலைவர்கள், “அவரா..?” என்று அதிசயித்து வாய்பிளப்பார்கள். ஜெயலலிதா சீட் கொடுக்கவில்லை என்பதற்காக அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று, அப்பேர்பட்ட அம்மாவுக்கே தனது செல்வாக்கைக் காட்டியவர் வெங்கடாசலம்.

புதுக்​கோட்டை மாவட்​டம் வடகாடு கிரா​மத்​தைச் சேர்ந்​தவர் அ.வெங்​க​டாசலம். கட்​சி​யால் தனக்கு என்ன பலன் என்று பார்ப்​ப​தை​விட தன்​னால் கட்​சிக்கு என்ன பலன் என்று பார்த்த தனித்​து​வ​மான அரசி​யல்​வா​தி​களில் வெங்​க​டாசல​மும் ஒரு​வர். அதி​முக-​வில் சாமானிய தொண்​ட​னாக இருந்து அமைப்​புச் செய​லா​ளர் வரைக்​கும் உயர்ந்​தவர். புதுக்​கோட்டை மற்​றும் சிவகங்கை மாவட்​டத்​தைச் சேர்ந்த முத்​தரையர் சமூகத்து மக்​கள் வெங்​க​டாசலத்தை தங்​களுக்​கான தலை​வ​னாகவே பார்த்​தார்​கள். முதல் முறை​யாக இவருக்கு 1984-ல் ஆலங்​குடி தொகு​தி​யில் சீட் கொடுத்​தார் எம்​ஜிஆர். அந்​தத் தேர்​தலில் வெற்​றி​பெற்​றாலும் அடுத்து வந்த மூன்று தேர்​தல்​களில் போட்​டி​யிடும் வாய்ப்பை அதி​முக இவருக்கு வழங்​க​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *