
தொண்டர்களை தேர்தல் களத்துக்கு தயார்படுத்தும் அதேசமயத்தில், புகார்களில் சிக்கும் கட்சிப் நிர்வாகிகளை தேர்தல் சமயம் என்றுகூட பாராமல் களையெடுத்தும் வருகிறது திமுக தலைமை. அந்த விதத்தில் தான் கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.
கார்த்திக் நீக்கப்பட்டதன் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய கோவை மாநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள், “கோவை மாவட்டம் அதிமுக கோட்டை என்ற இமேஜை உடைக்கவே செந்தில் பாலாஜியை கோவைக்கு அனுப்பி வைத்தது தலைமை. அப்படி கோவைக்கு வந்த அவர், மைக்ரோ லெவலில் கட்சியினரின் நடவடிக்கைகளை கண்காணித்து களையெடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறார். அவர் கோவைக்கு பொறுப்பேற்ற பிறகு நடந்த தேர்தல்களில் திமுக வெற்றிமுகமே கண்டிருப்பதால் அவர் சொல்வதை தலைமையும் தட்டாமல் ஏற்றுக் கொள்கிறது.