
புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடருக்கு முன்பாக அக்டோபர் 7 இல் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துகிறார் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். இதன்மூலம், அவர் மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே பாலமாக முயற்சிப்பதாகக் கருதப்படுகிறது.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பரில் தொடங்குகிறது. அநேகமாக இது, பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு தொடங்கும் வாய்ப்புகள் உள்ளன. வழக்கமாக நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு ஒருநாள் முன்பாகவே அனைத்துக் கட்சி கூட்டத்தை குடியரசு துணைத் தலைவர் நடத்துவது உண்டு.