
புதுடெல்லி: சுதர்சன சக்கர திட்டத்தின் கீழ் மத்திய அரசின் ‘அட்வான்ஸ்டு வெப்பன் அண்ட் எகியூப்மென்ட் இண்டியா' (ஏடயுள்யூஇஐஎல்) நிறுவனத்திடம் இருந்து 6 ஏகே-630 வான் பாதுகாப்பு துப்பாக்கி அமைப்புகளை இந்திய ராணுவம் கொள்முதல் செய்ய உள்ளது. இதற்கான டெண்டரை ராணுவம் நேற்று வெளியிட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: டிரோன்கள், ராக்கெட், பீரங்கி குண்டுகள் ஆகியவற்றின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்த ஆயுதம் பயன்படுத்தப்படும். பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் அதிக மக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்புக்கு இவை பயன்படுத்தப்படும்.