
சென்னை: ‘திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் 1,968 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்’ என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் 2023-ம் ஆண்டுக்கான தற்கொலைகள் மற்றும் விபத்து உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. இதில், தமிழகத்தில் மொத்தம் 19,483 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 22,686 பேர் தற்கொலை செய்துகொண்ட மராட்டியத்துக்கு அடுத்தபடியாக அதிக தற்கொலைகள் நிகழும் மாநிலம் தமிழகம்தான்.