
கரூர்: கரூர் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தேசிய பட்டியலின ஆணையத் தலைவர் கிஷோர் மக்வானா கூறினார்.
கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, சம்பவம் நடைபெற்ற வேலுசாமிபுரத்தில் தேசிய பட்டியலின ஆணையத் தலைவர் கிஷோர் மக்வானா நேற்று ஆய்வு செய்தார்.