
புதுடெல்லி: தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 2 நாட்களுக்கு முன்னர் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது இஐஏ பல்லைக்கழகத்தில் மாணவர்களுடன் ராகுல் காந்தி உரையாடினார்.
அப்போது அவர் பேசும்போது, ‘‘இந்தியாவில் பல மதங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் உள்ளன. ஜனநாயக அமைப்பு அனைவருக்கும் இடமளிக்கும் ஒரு தளமாக செயல்படுகிறது. தற்போது, அந்த ஜனநாயக அமைப்பு பாஜக தலைமையிலான அரசின் கீழ் பல திசைகளில் இருந்தும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இதுதான் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது’’ என்று குற்றம் சாட்டினார்.