
கரூர்: கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன் நேற்று ஒப்படைத்தார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் மற்றும் உயிரிழந்தோர் குடும்பத்தினரை சந்தித்து விசாரணை நடத்தினார்.