
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாட்னாவில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவம்பர் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அந்த மாநிலத்தில் நவம்பரில் பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.