
புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தில் இருமல் சிரப் உட்கொண்டதால் குழந்தைகள் உயிரிழந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து, ஆறு மாநிலங்களில் உள்ள இருமல் சிரப் மற்றும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தயாரிக்கும் 19 உற்பத்தி நிலையங்களில் மத்திய மருந்து ஒழுங்குமுறை நிறுவனமான (CDSCO) ஆய்வுகளைத் தொடங்கியுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் ஒன்பது குழந்தைகள், மகாராஷ்டிராவில் இரண்டு குழந்தைகள் மற்றும் ராஜஸ்தானில் ஒரு குழந்தை என 12 குழந்தைகள் இருமல் சிரப் உட்கொண்டதால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனையடுத்து, மருந்துகளின் தரத்தில் குறைபாடுகளை கண்டறிந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்கான செயல்முறையை பரிந்துரைக்கும் நோக்கில், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (CDSCO) ஆய்வுகள் நேற்று (அக்டோபர் 3) தொடங்கியது.