
புதுடெல்லி: நாட்டின் மக்கள் தொகையில் ஜெயின் சமூகத்தின் எண்ணிக்கை 0.5 சதவிகிதம். ஆனால் இவர்கள் நாட்டின் மொத்த வரி பங்களிப்பில் 24 சதவிகிதம் செலுத்துவதாக மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டியுள்ளார்.
ஹைதராபாத்தில் ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பு இணைப்பு 2025 மாநாடு நடைபெற்றது. இதில் முக்கிய விருந்தினராகப் பங்கேற்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். இந்த மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியபோது, "இந்திய பொருளாதாரத்தில் ஜெயின் சமூகத்தினரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அவர்கள் மக்கள் தொகையில் 0.5% மட்டுமே உள்ளனர்.