
புதுடெல்லி: பிஹார் மக்களில் பலர் தங்கள் மாநிலத்தைவிட்டு வெளியேறியதற்கு உண்மையான காரணம், காங்கிரஸ் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சிகள்தான் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “பிஹாரின் கல்வி முறையை காங்கிரஸும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் சீரழித்தன. 25 ஆண்டுகளுக்கு முன்பு பிஹாரில் கல்வி முறை எவ்வாறு சீரழிந்து கிடந்தது என்பது இன்றைய தலைமுறைக்கு தெரியாமல் இருக்கலாம். (புதிதாக) பள்ளிகள் திறக்கப்படவில்லை, ஆட்சேர்ப்பும் நடைபெறவில்லை. பிஹாரிலேயே தங்கள் குழந்தை படித்து முன்னேறுவதை எந்த பெற்றோர்தான் விரும்ப மாட்டார்கள்?