
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் போதுமான முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 603 திறன் வாய்ந்த தண்ணீர் பம்புகள் தயார் நிலையில் உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழாண்டில் வடகிழக்கு பருவமழை இம்மாதம் 2-வது முதல் 3-வாரத்தில் தொடங்கவுள்ளது. இதற்கிடையில் சென்னையில் மழை வெள்ளத்தைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சென்னை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. இதுபோல, சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களில், மழை வெள்ளம் புகுந்துவிடாமல் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் எடுக்கப்பட்டுள்ளது.