• October 4, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: அ​சாம் பாடகர் ஜுபின் கார்க் மரணம் தொடர்​பாக, அவருடன் படகில் சென்ற 2 இசைக் கலைஞர்​களை கைது செய்து அசாம் போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல பாடகர் ஜுபின் கார்க், இசை நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க சிங்​கப்​பூர் சென்​றிருந்​தார். அங்கு கடலில் ஸ்கூபா டைவிங் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க ஒரு படகில் சென்​றுள்​ளார். கடலில் நீந்​தும் போது அவர் நீரில் மூழ்கி இறந்​தார். இச்​சம்​பவம் தொடர்​பாக ஜுபின் கார்க் மேலா​ளர் சித்​தார்த்த சர்​மா, நிகழ்ச்சி ஏற்​பாட்​டாளர் சியாம்​கானு மகந்தா ஆகியோர் டெல்​லி​யில் கடந்த புதன் கிழமை கைது செய்​யப்​பட்​டனர். இந்த வழக்​கில் கொலை குற்​றச்​சாட்​டு​களை​யும் அசாம் சிஐடி போலீ​ஸார் சேர்த்​துள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *