
புதுடெல்லி: அசாம் பாடகர் ஜுபின் கார்க் மரணம் தொடர்பாக, அவருடன் படகில் சென்ற 2 இசைக் கலைஞர்களை கைது செய்து அசாம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல பாடகர் ஜுபின் கார்க், இசை நிகழ்ச்சியில் பங்கேற்க சிங்கப்பூர் சென்றிருந்தார். அங்கு கடலில் ஸ்கூபா டைவிங் நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு படகில் சென்றுள்ளார். கடலில் நீந்தும் போது அவர் நீரில் மூழ்கி இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஜுபின் கார்க் மேலாளர் சித்தார்த்த சர்மா, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சியாம்கானு மகந்தா ஆகியோர் டெல்லியில் கடந்த புதன் கிழமை கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கொலை குற்றச்சாட்டுகளையும் அசாம் சிஐடி போலீஸார் சேர்த்துள்ளனர்.