
சென்னை: இரண்டு தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அடுத்த மாதம் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் தற்போது அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. இதுவரை, 60-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதையடுத்து, அம்ரித் பாரத் ரயில், தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில், வந்தே மெட்ரோ உட்பட பல்வேறு வகைகளில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. அதிலும், தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரித்து, இரவு நேரங்களில் இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.