
மீரட்: உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் ரயா பசர்க் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் மசூதி மற்றும் 30 ஆயிரம் சதுர மீட்டரில் பிரம்மாண்ட திருமண மண்டபம் கட்டப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் ரயா பசர்க் கிராமத்தில் வருவாய்த் துறையினர் நில அளவை நடத்தினர். அப்போது குளம் இருந்த இடத்தை ஆக்கிரமித்து மசூதி மற்றும் திருமண மண்டபம் கட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது.