
சென்னை: கடந்த 4 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சார்பில் நடத்தப்பட்ட தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றன.
அந்த வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மாதமும் 2-வது அல்லது 3-வது வெள்ளிக்கிழமையும், ஒவ்வோர் ஆண்டும் பெரிய அளவிலான 2 மெகா வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்களில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வுசெய்து கொள்கின்றன.