
புதுடெல்லி: உ.பி.யின் குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகளில் ஒருவர் ராஜா பைய்யா என்கிற ராகுராஜ் பிரதாப் சிங். பிரதாப்கரை சேர்ந்த இவர் 1993 முதல் 2018 வரை தொடர்ந்து சுயேச்சை எம்எல்ஏவாக இருந்தார். உ.பி.யில் ஆட்சிக்கு வரும் கட்சி எதிலும் சேராமலேயே அதன் அமைச்சரவையில் இடம்பெறும் அளவுக்கு அரசியல் செல்வாக்கு கொண்டவர்.
இவ்வாறு, பாஜக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளின் அரசில் அமைச்சராக இருந்தார். 2018-ல் ஜன்சத்தா தளம் என்ற தனிக் கட்சி தொடங்கி அதன் சார்பில் பிரதாப்கர் மாவட்டம் குண்டா தொகுதி எம்எல்ஏவாக தொடர்கிறார். ராஜா பைய்யா நேற்று முன்தினம் தனது மாளிகையில் ஆயுத பூஜை கொண்டாடினார். இதில் சுமார் 200 வகை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துப்பாக்கிகள் இடம் பெற்றிருந்தன. இவற்றை காண ஏராளமானோர் கூடினர். அவர்கள் பதிவுசெய்த காட்சிகள் வைரலாகி பார்ப்பவரை திகைக்க வைத்துள்ளன.