
சென்னை: சென்னை மாநகரில் தெரு நாய்கள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்குதல், மைக்ரோசிப் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒருங்கிணைந்த மேலாண்மை இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி எல்லைக்குள் செல்லப் பிராணிகளை வளர்ப்பதற்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
செல்லப் பிராணிகள் வளர்ப்பை முறைப்படுத்த கடந்த 2023-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் முதல் மாநகராட்சி இணையதளம் வாயிலாக செல்லப்பிராணி உரிமம் பெறுவது நடைமுறையில் உள்ளது.