
சென்னை: ஆளுநர் மாளிகை, முதல்வர் ஸ்டாலின் வீடு, விமான நிலையம் உட்பட சென்னையில் பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
சென்னையில் கடந்த ஓராண்டாகவே மின்னஞ்சல் மூலம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், முதல்வர், அமைச்சர்களின் வீடு, ஆளுநர் மாளிகை என பல்வேறு இடங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.