
கரூர் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தில், திமுக அரசை நோக்கி த.வெ.க, பாஜக, அதிமுக கை நீட்டும் நிலையில், ‘பாஜகவோடு விஜய் கூட்டு சேருகிறார்’ என்ற கோணத்தில் முதல்வர் ஸ்டாலினும், விசிக தலைவர் திருமாவளவனும், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் பேச ஆரம்பித்துள்ளனர்.
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிர்கள் பறிபோனது. இந்தச் சம்பவம் நடந்து 3 நாட்களுக்குப் பின்னர் வீடியோ வெளியிட்ட விஜய், அரசை குற்றம்சாட்டும் வகையில் பேசினார். அக்கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா ‘நேபாள புரட்சி, இலங்கை புரட்சி’ என்றெல்லாம் தொண்டர்களை உசுப்பேற்றி பதிவை வெளியிட்டு, உடனடியாக நீக்கினார்.