• October 3, 2025
  • NewsEditor
  • 0

கரூர்: 3 மணி நேரம் கழித்து ட்வீட், 3 நாள் கழித்து வீடியோ வெளியிடுபவர் தலைவராக முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி கூறியுள்ளார்.

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 116 காயமடைந்தனர். இச்சம்பவம் நடந்த பல்வேறு கட்சியினர் பார்வையிட்டு வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, எம்.பி.க்கள் ராதாகிருஷ்ணன், சிவதாசன் (கேரளா), சச்சிதானந்தம் (திண்டுக்கல்), கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் வாசுகி, எம்எல்ஏ நாகைமாலி கொண்ட குழுவினர் இன்று (அக்.3) கரூர் வேலுசாமிபுரத்தில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *