
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, 4 முதல் 5 போர் விமானங்கள், ரேடார்கள், கட்டுப்பாட்டு மையங்கள், ஓடுபாதைகள் உள்ளிட்டவற்றை பாகிஸ்தான் இழந்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக இந்திய விமானப் படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப் படை தினம் வரும் 8-ம் தேதி கொண்டாடப்பட் உள்ள நிலையில், அதை முன்னிட்டு டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஏ.பி. சிங், இந்திய விமானப் படையின் தொலைநோக்குத் திட்டங்கள், ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட இழப்புகள் உள்ளிட்டவை குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியது: “விமானப்படை தனது போர் திறன்களை மேம்படுத்த 2047-க்கான செயல்திட்ட வரைபடத்தை உருவாக்கியுள்ளது.