
அரூர்: ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு கடத்தூர் மற்றும் அரூர் நகரங்களில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசியவர் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் 2026 தேர்தலில் திமுக கூட்டணி 200 இடம் வெல்லும் என்று கனவு காண்கிறார். இந்த கூட்டமே அடுத்தாண்டு அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும் என்பதற்கு சாட்சி. முதல்வர் ஸ்டாலின் கூட்டணியை நம்பிக்கொண்டு இருக்கிறார், கூட்டணி வேண்டும் ஆனால் அதுமட்டும் போதாது, மக்கள் நம்பிக்கையைப் பெற வேண்டும். மக்கள் நினைத்தால்தான் யாரும் ஆட்சிக்கு வர முடியும். ஒருபோதும் இந்த தேர்தலில் திமுகவுக்கு அது நடக்காது.