
திருச்சி: விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸ் அஞ்சுகிறதா என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார். முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு தினத்தையொட்டி, திருச்சியில் நேற்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரூர் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக, குற்ற உணர்வு இல்லாமல், கொஞ்சம் கூட கவலை இல்லாமல், ஆட்சியாளர்கள் மீது பழிபோட முயற்சிக்கிறார் தவெக தலைவர் விஜய். அவர் ஆபத்தான அரசியலை கையில் எடுத்திருக்கிறார். அல்லது ஆபத்தானவர்களிடம் சிக்கி இருக்கிறார்.