
மதுரை: கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும், கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரியும் தாக்கலான மனுக்களை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பொதுக் கூட்டம் நடத்த தடை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் செப். 27-ல் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 2 வயது குழந்தை, பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.