
புதுடெல்லி: தனது கணவரை விடுவிக்கக்கோரி சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும், அரசியலமைப்பு சட்டத்தின் 6-வது அட்டவணையில் லடாக்கை சேர்க்க வலியுறுத்தியும் சமூக ஆர்வலரும், கல்வியாளருமான சோனம் வாங்சுக் கடந்த மாதம் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார். வேறு சில அமைப்புகளும் இதில் கலந்து கொண்டன.