
புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பேசிய அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த 1925-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பு நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற வருடாந்திர விஜயதசமி விழாவில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பேசும்போது, “பழங்காலத்தில் நமது சமுதாயத்தில் சிறந்த தனிநபர்களை உருவாக்கும் முறை இருந்தது. இது வெளிநாட்டினரின் ஊடுருவல் காரணமாக அழிக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பு அந்த முறையை மீண்டும் உருவாக்கியது. கடந்த 100 ஆண்டுகளாக, சங்கத்தின் நிர்வாகிகள் எந்தச் சூழ்நிலையிலும் அந்த முறையைத் தொடர்ந்து பேணிக் கொண்டு வந்துள்ளனர்.