
புதுடெல்லி: டெல்லியில் பிரபல சாமியாராக இருந்தவர் சைதன்யானந்தா பாபா என்று அழைக்கப்படும் பார்த்தசாரதி (62). இவர், பல கோடிகளில் நன்கொடைகள் பெற்று டெல்லியில் ஏழை சிறுமிகள் மற்றும் பெண்களுக்கான ஆசிரமங்களை நடத்தி வந்தார்.
இந்நிலையில் இவர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக 17 பெண்கள் டெல்லி போலீஸாரிடம் சமீபத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து தலைமறைவான சைதன்யானந்தாவை தீவிர தேடலுக்கு பிறகு உ.பி.யின் ஆக்ராவில் போலீஸார் கைது செய்தனர்.