
சென்னை: காந்தி ஜெயந்தியையொட்டி, அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். நாடெங்கும் நேற்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.
சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.