
போபால்: மத்திய பிரதேசத்தில் 2 வெவ்வேறு இடங்களில் துர்கா சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் 10 சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் நவராத்திரி விழாவின் இறுதி நாளான நேற்று விஜயதசமி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் அருகே இங்கோரியா நகரில் இருந்து துர்கா சிலைகளை கரைப்பதற்காக நேற்று டிராக்டரில் எடுத்துச் சென்றுள்ளனர்.
அந்த டிராக்டரில் சிறுவர்களும் பயணித்துள்ளனர். சம்பல் நதியின் மீது உள்ள பாலத்தின் மீது டிராக்டர் நிறுத்தப்பட்டது. அப்போது 12 வயது சிறுவன் திடீரென இன்ஜினை ஆன் செய்ததால் வாகனம் திடீரென முன்னேறி சம்பல் நதியில் விழுந்ததாக கூறப்படுகிறது.