
தருமபுரி: அரசியல் நிகழ்ச்சிகளின்போது மக்களுக்கும், தலைவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். தருமபுரியில் நேற்று பொதுமக்களிடையே பழனிசாமி பேசியதாவது: கரூரில் 41 பேர் உயிரிழந்ததற்கு அரசு போதிய பாதுகாப்பு ஏற்படுத்தித் தராததுதான் காரணம்.
அரசியல் நிகழ்ச்சிகளின்போது மக்களுக்கும், தலைவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை. முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல் துறை உள்ளதால், கரூர் சம்பவத்துக்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டும். மக்கள் கேள்விகளுக்கும் அவர்தான் பதில் கூற வேண்டும். தற்போது ஒரு நபர் ஆணைய விசாரணை தொடங்கியுள்ளது.