
புதுடெல்லி: மலேசியாவில் அக்டோபர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் ஆசியான் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆகியோர் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
47-வது ஆசியான் உச்சி மாநாடு மலேசியாவில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல். அதே நேரத்தில் இந்த நிகழ்வில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்புக்கு மலேசியா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல். அதை ட்ரம்ப் உறுதி செய்தால் இந்த நிகழ்வின் போது பிரதமர் மோடி மற்றும் ட்ரம்ப் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.