• October 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​டாஸ்​மாக் பணி​யாளர்​கள் கால​வரையற்ற காத்​திருப்பு போராட்​டம் அக்​.28-ம் தேதி்க்கு ஒத்​திவைக்​கப்​படு​வ​தாக, டாஸ்மாக் பணி​யாளர் சங்​கம் அறி​வித்​துள்​ளது. தமிழ்​நாடு டாஸ்​மாக் பணி​யாளர் சங்​கத்​தின் மாநில நிர்​வாகக் குழுக் கூட்​டம் தலை​வர் பெரிய​சாமி தலை​மை​யில் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. கூட்​டத்​தில் ஏஐடியூசி தேசிய செய​லா​ளர் மூர்த்​தி, டாஸ்​மாக் பணி​யாளர் சங்க பொதுச் செய​லா​ளர் தனசேகரன், பொருளாளர் கோவிந்​த​ராஜன் மற்​றம் நிர்​வாகக்​குழு உறுப்​பினர்​கள் கலந்து கொண்​டனர்.

தமிழ்​நாடு டாஸ்​மாக் பணி​யாளர்​கள் சங்​கம் பணி நிரந்​தரம், கால​முறை ஊதி​யம், ஓய்​வூ​தி​யம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை முன் வைத்து அக்.2 ம் தேதி தலை​மைச் செயல​கம் முன்பு கால​வரையற்ற போராட்​டம் மற்​றும் விதிப்​படி பணி செய்​யும் இயக்​கத்தை அறி​வித்​திருந்​தது. கடந்த 26ம் தேதி டாஸ்​மாக் மேலாண்மை இயக்​குநருடன் நடை​பெற்ற பேச்சு வார்த்​தை​யில் முடிவு எட்​டப்​ப​டாத நிலை​யில், அமைச்​சர் முத்​து​சாமி சங்க நிர்​வாகி​களை தொடர்பு கொண்டு கோரிக்​கைகள் தொடர்​பாக பேசி தீர்வு காணலாம் என தெரி​வித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *