
மதுரை: கரூரில் செப்.27-ம் தேதி தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது கரூர் போலீஸார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், கரூர் நகரப் பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நேற்று தனித்தனியாக முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.