• October 1, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பின் காசா போர் நிறுத்த திட்​டத்​துக்கு பிரதமர் மோடி முழு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் முதல் இஸ்​ரேல் ராணுவத்​துக்​கும் காசா பகு​தியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்​கும் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் 21 அம்ச அமைதி திட்​டத்தை அறி​வித்​தார்.

‘‘தீ​விர​வாதம் இல்​லாத அமைதி மண்​டல​மாக காசா மாற்​றப்​படும். ஹமாஸ் பிடி​யில் உள்ள இஸ்​ரேல் பிணைக் கைதி​கள் உடனடியாக விடு​தலை செய்​யப்பட வேண்​டும். உயி​ரிழந்த இஸ்​ரேலியர்​களின் உடல்​களை ஒப்​படைக்க வேண்​டும். காசா​வில் இருந்து இஸ்​ரேல் ராணுவம் படிப்​படி​யாக வெளி​யேறும். பாலஸ்​தீனர்​களை கொண்ட குழு​வின் தலை​மை​யில் காசா இடைக்​கால நிர்​வாகம் அமைக்​கப்​படும். இதில் ஹமாஸுக்கு இடம் அளிக்​கப்​ப​டாது’’ என்று அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். அதிபர் ட்ரம்​பின் போர் நிறுத்த திட்​டத்​துக்கு இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு ஒப்​புதல் அளித்​துள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *