• October 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஒரு கட்​சித் தலை​வர் ஆறு​தல்​கூட சொல்​லாமல் தனது பாது​காப்பை மட்​டும் நினைத்து பயந்து சென்​றதை இது​வரை பார்த்​த​தில்லை என்று திமுக எம்​.பி. கனிமொழி தெரி​வித்​துள்​ளார். மேலும், ஆதவ் ஆர்​ஜூனா மீது ஏன் நடவடிக்கை எடுக்​க​வில்லை என ஆ.ராசா எம்​.பி. கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

இதுகுறித்து திமுக துணை பொதுச்​செய​லா​ள​ரும், நாடாளு​மன்ற குழுத் தலை​வரு​மான கனி​மொழி சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கரூரில் நடந்த துயரச் சம்​பவத்​தில் 41 பேர் இறந்​ததுடன், தற்​போதும் பலர் உயிருக்கு போராடி வரு​கின்​றனர். இந்த விவ​காரத்​தில் அரசி​யல் மனமாச்​சா​ரி​யங்​களைத் தாண்டி முதல்​வர் ஸ்டா​லின் உடனே கரூர் சென்​று, பாதிக்​கப்​பட்​ட​வர்​களை சந்​தித்​ததுடன் நிவாரண​மும் வழங்​கச் செய்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *