• October 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​விரை​வில் அனைத்து உண்​மை​களும் வெளியே வரும். ‘சி.எம். சார்’ பழி வாங்க வேண்​டும் என்​றால் என் மீது கை வையுங்​கள்; தொண்​டர்​களை விட்​டு​விடுங்​கள் என்று வீடியோ வெளி​யிட்​டுள்ளார் தவெக தலை​வர் விஜய்.

கரூரில் தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தின் போது ஏற்​பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இந்த சம்​பவம் குறித்து விஜய் மவுனமாக இருந்ததால், அவருக்கு பல்​வேறு தரப்​பில் இருந்து ஆதர​வும், எதிர்ப்​பு​களும் குவிந்​தன. இந்​நிலை​யில், தவெக தலை​வர் விஜய் 2 நாட்​களுக்​குப் பிறகு கரூர் சம்​பவம் தொடர்​பாக நேற்று வீடியோ வெளி​யிட்​டுள்​ளார். அவர் பேசி​யிருப்​ப​தாவது: என் வாழ்க்​கை​யில் இது​போன்ற வலி நிறைந்த தருணத்தை நான் எதிர்​கொண்​டது கிடை​யாது. சுற்​றுப் பயணத்​தில் என்​னை மக்​கள் பார்க்க வரு​வதற்கு, அவர்​கள் என் மீது வைத்​துள்ள அன்​பும், பாச​மும்​தான் காரணம். அந்த அன்​புக்​கும், பாசத்​துக்​கும் நான் எப்​போதும் கடமைப்​பட்​டிருக்​கிறேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *