
சென்னை: “முதல்வர் ஸ்டாலின் அரசியலுக்கு அப்பாற்பட்டு கரூர் சம்பவத்தை அணுகியுள்ளார். களத்தில் நிற்க வேண்டிய தலைவர்கள், ஏன் கரூரில் களத்திலே நிற்கவில்லை?” என திமுக எம்.பி.யும், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தவெக தலைவர் விஜய் கரூரில் கலந்துகொண்ட பிரச்சார நிகழ்ச்சியில் விலை மதிக்க முடியாத 41 உயிர்களை நாம் இழந்திருக்கிறோம். அரசியல் மனமாச்சரியங்களை தாண்டி இழந்தது மனித உயிர்கள் என்கின்ற அந்த அரிய உணர்வோடு, உன்னதமான உணர்வோடு முதல்வர் ஸ்டாலின் உடனடியாக சென்று, அவர்களை எல்லாம் சந்தித்து நிவாரணம் அறிவித்து இரவே திரும்பி இருக்கிறார்.