• September 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் நடந்தது என்ன என்பது தொடர்பாக தமிழக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அமுதா ஐஏஎஸ், பொறுப்பு டிஜிபி வெங்கடராமன், சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், சுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்டோர் கூட்டாக சில வீடியோ காட்சிகளுடன் விளக்கமளித்தனர்.

கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தவெகவினர் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் விபி மதியழகன் மற்றும் தவெக தொண்டரான பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *