• September 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கள ஆய்வு செய்து உண்மைகளைக் கண்டறிய தமிழகம் வந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் குழுவுடன் தவெக தலைவர் விஜய் இணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழக பாஜக கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை: கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக முழுமையாக கள ஆய்வு செய்து உண்மைகளை கண்டறிய தமிழகம் வந்துள்ள பாஜக எம்.பி. ஹேம மாலினி தலைமையிலான எட்டு பேர் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் குழுவை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் சந்தித்துப் பேச வேண்டும். நீதி கிடைப்பதற்கு துணை நிற்க வேண்டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *